நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் நேற்று (மார்ச் 28) தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 38 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். விராட் கோலி கடைசியாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தார். அதன் பின், 10 மாத இடைவெளிக்குப் பிறகு டி20 வடிவிலான போட்டியில் முதல் முறையாக நேற்று விளையாடினார். நீண்ட காலம் டி20 வடிவிலான போட்டிகளில் விளையாடாதபோதிலும், அவர் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சீரான இடைவெளிகளில் தனக்கு கிடைத்த ஓய்வு புத்துணர்ச்சி மற்றும் உற்சாகத்தோடு விளையாடுவதை உறுதி செய்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடும்போது, சோர்வடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், சீரான இடைவெளியில் எனக்கு கிடைக்கும் ஓய்வு என்னை புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
எப்போதெல்லாம் ஓய்வு முடிவடைந்து திரும்ப விளையாட வருகிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய 120 சதவிகித உழைப்பை வழங்குகிறேன். சரியான தயாரிப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் நான் விளையாட வருவதில்லை. எனக்கு கிடைக்கும் கூடுதல் ஓய்வு மனதளவில் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது என்றார்.
Summary
Regarding Royal Challengers Bangalore player Virat Kohli's explosive performance against Sunrisers Hyderabad...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

இம்பாக்ட் வீரர் விராட் கோலி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


