தான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே தன்னுடைய ஒரே நோக்கம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடங்கும் முன்பே முக்கிய வீரர்கள் பலரும் காயம் காரணமாக விலகினர். காயம் காரணமாக வீரர்கள் விலகியதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். அந்த அணியில் ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப் இருவரும் விலகியுள்ளனர். மதீஷா பதிரானா ஆரம்பக் கட்ட போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே தன்னுடைய ஒரே நோக்கம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டிய தேவை உருவானபோது, நான் அந்த சவாலை ஏற்றுக் கொண்டு விக்கெட் கீப்பராக செயல்பட்டேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட தயாராக இருக்கிறேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம். நாளுக்கு நாள் என்னால் முடிந்த வரை என்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்கிறேன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவது கற்றுக் கொள்வதில் எனக்கு மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவருக்கும் மிகப் பெரிய அனுபவத்தை தரப்போகிறது. நான் விளையாடும் அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதே எனது ஒரே நோக்கம் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நாளை (மார்ச் 29) நடைபெறும் அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Knight Riders player Angrish Raghuvanshi has said that his only goal is to bring victory to the team he plays for.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

சொந்த மண்ணில் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி! கொல்கத்தா வெற்றி!

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


