ஆர்சிபி அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா, “ஆர்சிபி எப்போதும் எனது டிஎன்ஏவின் ஒரு பகுதியாகவே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
ஆர்சிபி அணியை ரூ.166.6 பில்லியன் (ரூ.16,660 கோடி) இந்தியாவின் ஆதித்யா பிர்லா, டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான போல்ட் வென்சுரீஸ், பிளாக்ஸ்டோன் நிறுவனங்கள் வாங்கியுள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக கடந்தாண்டு ஐபிஎல் கோப்பையை ரஜத் படிதார் தலைமையில் வென்றது. 2008 முதல் இந்த அணியின் உரிமையாளராக தொழிலதிபர் விஜய் மல்லையா இருந்து வந்தார்.
ஆர்சிபி அணி முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மார்ச் 28ஆம் தேதி மோதுகிறது. புதிய நிறுவனங்கள் ஆர்சிபி அணியை வாங்கிய நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மல்லையா பதிவில் கூறியிருப்பதாவது:
ஆர்சிபியின் புதிய உரிமையாளர்களுக்கு இதயப்பூர்வமாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் மதிப்புமிக்க ஐபிஎல் அணியை வாங்கியவருக்கு நல்லது நடக்க வாழ்த்துகள்.
ஆர்சிபி அணியை 2008ல் ரூ.450 கோடிக்கு வாங்கியபோது பலரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். தவறான முதலீடு என்றும் விமர்சித்தார்கள். ராயல் சேலஞ் என்ற வணிக உரிமைப் பெயர் மீதிருந்த காதலால் ஆர்சிபி எனப் பெயரிட்டேன். ரூ.450 கோடி முதலீடு தற்போது ரூ.16,500 கோடியாக வளர்ந்திருப்பது மிகவும் மன நிறைவு தருகிறது.
துடைத்தழிக்க இயலாத நினைவுகளுடன் ஆர்சிபி எப்போதுமே எனது டிஎன்ஏவின் ஒரு அங்கமாக இருக்கும். உலகத்தின் சிறந்த வீராரக இருக்கும் இளம் வீரர் விராட் கோலியைத் தெர்வு செய்ததும் மற்றக்க முடியாது. எனது உரிமையில் இருக்கும்போது அணிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து எப்போதும் பெங்களூரின் சிங்கமான ஆர்சிபிக்கு ஆதரவாக இருங்கள் என்றார்.
Summary
RCB will always remain a part of my DNA...: Vijay Mallya reacts on IPL franchise's blockbuster sale.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆர்சிபி!

ரஜத் படிதார் ஆட்டமிழப்பில் சர்ச்சை..! கொந்தளித்த விராட் கோலி, ஆர்சிபி ரசிகர்கள்!

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli

தில்லி பந்துவீச்சு: பச்சை நிற ஜெர்ஸியுடன் களமிறங்கும் ஆர்சிபி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


