தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றதையடுத்து, நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (மார்ச் 20) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து வீரர்களை அந்த அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு மிட்செல் சாண்ட்னர் பேசியதாவது: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததன் மூலம், ஆடுகளத்தின் சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டோம். எங்களது வேகப் பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அளித்தார்கள். பென் சியர்ஸ் மற்றும் கைல் ஜேமிசன் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஜேம்ஸ் நீஷம் வீசிய மூன்று ஓவர்களும் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது.
ஜெரால்டு கோட்ஸீ அபாரமாக பந்துவீசியதால், இலக்கை துரத்திப் பிடிப்பது சவாலானதாக இருந்தது. ஆனால், எங்களது தொடக்க ஆட்டக்காரர்கள் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் சிறப்பாக விளையாடினர் என்றார்.
நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் (மார்ச் 22) வெலிங்டனில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
New Zealand captain Mitchell Santner has praised his players after their impressive win in the third T20I against South Africa.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னர் ஒரு மாதம் கிரிக்கெட் விளையாட மாட்டார்: நியூசி. கிரிக்கெட் வாரியம்

டி20 உலகக் கோப்பை தோல்விக்கு நியூசிலாந்தை டி20 தொடரில் பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா!

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்: 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


