சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய ஜார்ஜியா வேர்ஹாம்..! ஆஸி. 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டி குறித்து...

News image

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸி. மகளிரணி. - படம்: ஐசிசி

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

மகளிர் டி20 உலகக் கோப்பையின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

மான்செஸ்டரில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

நம். 3 வீராங்கனை ஃபோப் லிட்ச்ஃபீல்டு அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். எலீஸ் பெர்ரி 36, ஜார்ஜியா வேர்ஹாம் 32 ரன்கள் குவித்தார்கள். 20 ஓவர்களில் ஆஸி. 172/8 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 16.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 44 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சார்பில் ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்டுகளும் மொலினிக்ஸ், அலானா கிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய ஜார்ஜியா வேர்ஹாம் ஆட்ட நாயகி விருது வென்றார். ஆஸி. அடுத்த போட்டியில் வங்கதேசத்துடன் ஜூன் 17ஆம் தேதி மோதுகிறது.

Summary

ICC Women's T20 World Cup 2026 Australia Women won by 65 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.