ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தில்லி கேபிடல்ஸ் மோசமான தோல்வியைத் தழுவியது.
ஆர்சிபியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தில்லி கேபிடல்ஸ் அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதற்கு முந்தையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 264 ரன்கள் குவித்தும் தில்லி கேபிடல்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. இமாலய இலக்கை எடுத்து பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தோல்வி, குறைந்த ரன்கள் எடுத்து ஆர்சிபிக்கு எதிராக மோசமான தோல்வி என இந்த இரண்டு தோல்விகள் தில்லி கேபிடல்ஸுக்கு பல விஷயங்களை யோசிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு தில்லி கேபிடல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கண்டிப்பாக தில்லி கேபிடல்ஸ் அச்சத்தில் இருக்கும். ஆனால், அவர்கள் அச்சப்படுவதற்கு இது சரியான நேரமில்லை. அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இந்த தொடரை அவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங்க வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரை தில்லி கேபிடல்ஸ் நன்றாக தொடங்கினார்கள். ஆனால், அவர்கள் விளையாடும் விதம் தற்போது மாறியுள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணி இரண்டு புள்ளிகள் கிடைக்காமல் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டால், ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி அவர்களுக்கு கண்டிப்பாக வேதனையளிக்கும். அதனால், ஆர்சிபிக்கு எதிரான தோல்வியை மறந்துவிட்டு, தில்லி கேபிடல்ஸ் புத்துணர்ச்சியுடன் விளையாட வேண்டும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேபிடல்ஸ் அணி, 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A former Indian player has spoken about whether the Delhi Capitals team is under pressure following their crushing defeat against Royal Challengers Bangalore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட போட்டி எது தெரியுமா?

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


