சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த சிஎஸ்கே, அதன் பின் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஹைதராபாதில் நடைபெற்ற கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடம் சிஎஸ்கே தோல்வியடைந்தது.
ஹைதராபாதுக்கு எதிரான கடந்த போட்டியின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 6 போட்டிகளில் 201 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆயுஷ் மாத்ரே விலகியது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக 6-லிருந்து 12 வாரங்கள் தேவைப்படும். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறோம் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் அடுத்தப் போட்டியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Chennai Super Kings player Ayush Mhatre has been ruled out of the remaining matches of the IPL tournament due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!

டாப் 3ல் 2 இடங்களைப் பிடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


