மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்தி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் ஜூன் 12 முதல் ஜூலை 5 இடைவெளியில் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி லார்ட்ஸ் திடலில் நடைபெறுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், தற்போது அணிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கடந்த முறை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகை ரூ.74 கோடியாக இருந்தது.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்தி ஐசிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகையில் இந்த முறை 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, பரிசுத் தொகை ரூ.82 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பரிசுத் தொகை கடந்த எடிசனைக் காட்டிலும் தற்போது 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.21.8 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும். இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.10 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.6.29 கோடி வழங்கப்படும். குரூப் ஸ்டேஜ் போட்டியில் அணிகள் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.29 லட்சம் வழங்கப்படும். உலகக் கோப்பையில் பங்குபெற்று விளையாடும் 12 அணிகளுக்கும் குறைந்தது ரூ. 2.06 கோடி பரிசுத் தொகையாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
Summary
The ICC has announced an increase in the prize money for the Women's T20 World Cup.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்த இந்தியா!
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


