மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும்: முகமது கைஃப்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

News image

ரிஷப் பந்த் - படம் | AP

Updated On :10 ஏப்ரல் 2026, 5:04 pm IST

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்புடன் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று (ஏப்ரல் 9) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில், லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் போட்டி குறித்து விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ச்சியாக வெற்றிகள் பெற பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் ஆட்டத்தின் இறுதி வரை விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும். அவர் அனுபவம் வாய்ந்த வீரர். கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் களமிறங்கும்போது, லக்னௌ அணி பெரிதாக அழுத்தத்தில் இல்லை. முதல் 5 ஓவர்களில் லக்னௌ அணி 41 ரன்கள் எடுத்திருந்தது.

யாராவது ஒரு பேட்டர் ஆட்டத்தின் இறுதிவரை பொறுப்பாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தர வேண்டும். அந்த பொறுப்பை கேப்டன் ரிஷப் பந்த் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கேப்டனாக நீங்கள் பொறுப்பாக விளையாடாவிட்டால், உங்களால் உங்களது அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியாது. சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிராக ரிஷப் பந்த் நன்றாக விளையாடினார். ஆனால், அவர் தொடர்ச்சியாக அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும்.

போட்டி குறித்து விழிப்புணர்வை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்.கேப்டனின் பொறுப்பு ஆட்டத்தின் இறுதி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி பெற்றுத் தருவது. அந்த விஷயத்தில் ரிஷப் பந்த் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ரிஷப் பந்த் 9 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Mohammad Kaif has stated that Lucknow Super Giants captain Rishabh Pant needs to play responsibly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.