ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் இன்று (ஏப்ரல் 7) நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் களம் காண்கிறது.
இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான பேட்டிங் மூலம் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து அசத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு அவர் அதிக ரன்கள் குவித்துள்ளார். அதனால், ராஜஸ்தானுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் இன்றையப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 15 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 42.66 என்ற சராசரியுடன் 512 ரன்கள் குவித்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக அவர் 147.12 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். மேலும், அந்த அணிக்கு எதிராக அவர் 4 அரைசதங்கள் விளாசியுள்ளார். அந்த அணிக்கு எதிராக அவரது அதிகபட்ச ஸ்கோர் 79* ஆகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 67 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு அரைசதம் அடங்கும். ஐபிஎல் தொடரில் 153 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4378 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அவர் 2 சதங்கள் மற்றும் 30 அரைசதங்கள் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding whether Suryakumar Yadav will continue his excellent form against the Rajasthan Royals...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை தடுக்குமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


