தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!

முதல் 10 ஓவர்கள் திணறினாலும் சுதாரித்து விளையாடி வெற்றி பெற்றது...

News image

தில்லி கேபிடல்ஸ் அணியில் சுதாரித்து விளையாடிய சமீர் ரிஸ்வி - AP

Updated On :1 ஏப்ரல் 2026, 11:03 pm IST

ஐபிஎல் கிரிக்கெட் 2026 தொடரில் இன்றைய ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.

லக்னௌ அணிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்து சிறப்பாக பந்துவீசியது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தில்லி கேபிடல்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன், தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

அடுத்து, 142 ரன்கள் இலக்குடன் தில்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணியும் அடுத்தடுத்து விக்கெட்களைப் பறிகொடுத்து ரன் திரட்ட தடுமாறியதால் ஆட்டம் பரபரப்பாகச் சென்றது.

முதல் 10 ஓவர்கள் திணறினாலும் தில்லி கேபிடல்ஸ் அணியில் சுதாரித்து விளையாடிய சமீர் ரிஸ்வியும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர். 4 விக்கெட்களை இழந்து 17.1 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சமீர் ரிஸ்வி 47 பந்துகளில் 70 ரன்கள் (5 பௌண்டரிகள், 4 சிக்ஸர்கள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்..

Summary

Delhi Capitals won by 6 wkts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.