தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம் (உமாஸம்ஹிதை)- தொகுப்பாசிரியர் டாக்டர் தி.சு. ராகவன்; பக். 308; ரூ. 750; கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், சென்னை- 600 122, ✆ 80697 98989.
ஆரூடம் என்பதைக் கலையாகவும், அறிவியல் ரீதியிலும் நம் முன்னோர்கள் அணுகினார்கள் என்பதுதான் உண்மை. எந்தவிதமான தொழில்நுட்பமோ, உபகரணங்களோ இல்லாத காலத்தில் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது மட்டுமல்லாமல், மிகத் துல்லியமாகக் கோள்கள் குறித்தும் அவற்றின் இடங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கமும் நடைபெறுகிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தந்த கிரகங்களின் ஆதிக்கக் காலத்தை 'தசை' என்கிறார்கள். ஒவ்வொரு தசையிலும் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் அல்லாமல், ஏனைய எட்டு கிரகங்களின் சஞ்சாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போகின்றன. அதை 'புக்தி' என்கிறார்கள். ராசியில் அமைந்திருக்கும் கிரகங்கள், அவற்றின் தசைகள், அந்தந்த தசையின் ஏனைய கிரகங்களின் சஞ்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விற்பன்னர்களின் ஆரூடம் வழங்கப்படுகிறது.
ஒருவரின் வாழ்க்கையில் தசைகள், தசையிலான புக்தி என்ற கணக்குப் போட்டால் மொத்தம் 90 தசா புக்திகள் வந்து போகின்றன. 'உமா சம்ஹிதா' என்கிற சம்ஸ்கிருத நூல், பரமசிவன்- பார்வதி இடையேயான உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு தசாபுக்தியின் போதும், பாராயணம் செய்ய வேண்டிய ராமாயணத்தின் குறிப்பிட்ட பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உமா சம்ஹிதா அடிப்படையில் தசா புக்திகளுக்கான ராமாயண பாராயணம் அனைவரும் படிக்கும் வகையில் தேவநாகரி மற்றும் தமிழில், தனித்தனியான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஜோதிடர்களுக்கும், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தங்களது தசாபுக்தியில் ராமாயணப் பகுதிகளை பாராயணம் செய்ய விழைபவர்களுக்குமான புத்தகம் தசாபுக்தியில் ஸ்ரீமத் ராமாயண பாராயண க்ரமம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

சண்முகக் கவசம் பாராயணம்

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?

ஆறுமுகனேரி கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

