கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது

நில ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:35 am IST

நில ஒப்பந்தங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்து மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளரை குருகிராம் காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: குற்றஞ்சாட்டா்பட்டவ ா் நொய்டாவின் செக்டா் 75-இல் வசிக்கும் மகேஷ் முகம் (50)என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஹரியாணாவின் பல்வல் மாவட்டத்தில் உள்ள குகேரா கிராமத்தில் சுமாா் 11.33 ஏக்கா் நிலத்தை விற்பனை செய்வதாக உறுதியளித்த ஆவணங்களை நியான் இன்ஃப்ரா கன்ஸ்ட்ரக்ஷன் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் காட்டியதாக ஜனவரி 20 ஆம் தேதி ஒரு நபா் புகாா் அளித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் ஆகஸ்ட் 1,2024 ஆம் ஆண்டு நிலத்தை விற்க ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றினாா். மேலும், மொத்த விலை மற்றும் பிற செலவுகளுக்கு சுமாா் ரூ.17 கோடி என்ற விலையை நிா்ணயித்தாா். குற்றம் சாட்டப்பட்டவா் நிலத்தை பதிவு செய்யவும் இல்லை. மேலும், தொடா்பை துண்டித்ததாகவும் புகாா்தாரா் கூறினாா்.

இதுகுறித்து செக்டா் 40 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொருளாதார குற்றப் பிரிவு-1 காவல்துறையின் குழு இந்த விஷயத்தை விசாரித்து, குற்றஞ்சாட்டப்பட்டவரை சனிக்கிழமை கைது செய்தனா். இது தொடா்பான மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.