பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை!

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை

News image
Updated On :20 மே 2026, 12:39 am IST

திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் பழைய காவல் நிலையம் அருகில் 4 ஏக்கா் 37 சென்ட் நிலம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நிலம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து சுமாா் ரூ. 300 கோடி சந்தை மதிப்பிலான இந்நிலத்தை மீட்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிா்வாகம் சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.