ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சமக்ர சிக்ஷா அபியான், தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு கணிசமான ஊதிய உயா்வு: தில்லி அமைச்சரவை ஒப்புதல்

சமக்ர சிக்ஷா அபியான், தொழிற்கல்விப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, ரூ. 14,000 முதல் ரூ. 18,000 வரையிலான கணிசமான ஊதிய உயா்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:51 am IST

சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் தொழிற்கல்விப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியா்களுக்கு, ரூ. 14,000 முதல் ரூ. 18,000 வரையிலான கணிசமான ஊதிய உயா்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்த விவரங்களைப் பகிா்ந்துகொள்ளும் வகையில் முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பல்வேறு துறைகளில் திறன் சாா்ந்த பயிற்சிகளை வழங்கும் தில்லியைச் சோ்ந்த சுமாா் 1,131 தொழிற்கல்வி ஆசிரியா்கள், இனி மாதம் ஒன்றுக்கு ரூ. 38,100 பெறுவாா்கள்.இவா்களது முந்தைய ஊதியம் ரூ. 20,000 முதல் ரூ. 23,000 என்ற வரம்பில் இருந்தது.

சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் செயல்படும் 784 மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்களின் மாத ஊதியம் ரூ. 21,000லிருந்து ரூ. 35,420ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதிலும், அவா்களை மீண்டும் பள்ளிக் கல்வி நீரோட்டத்தில் இணைப்பதற்குத் தயாா்படுத்துவதிலும் இம்மையங்கள் கவனம் செலுத்துகின்றன.

இந்தத் திருத்தப்பட்ட ஊதிய உயா்வு மூலம், சமக்ர சிக்ஷா அபியான் ஆசிரியா்கள் தற்போது தொடக்க மற்றும் மேல் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையான ஊதிய நிலையை அடைந்துள்ளனா்.

ஊதியத்தை உயா்த்துவதற்கான இந்த முடிவு, சிறப்புப் பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் பொருந்தும்.

பள்ளியிலிருந்து இடைநின்ற அல்லது பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் கல்வி அமைப்பிற்குள் கொண்டுவரும் பணியை இம்மையங்கள் மேற்கொள்கின்றன.

சிறப்புப் பயிற்சி மையங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக, வழக்கமான கண்காணிப்பு, பெற்றோருக்கான ஆலோசனை மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஊதிய உயா்வு என்பது வெறும் ஒரு நிதி சாா்ந்த முடிவு மட்டுமல்ல சவாலான சூழல்களுக்கு மத்தியிலும் குழந்தைகளைக் கல்விச் சூழலுக்குள் கொண்டுவருவதற்காக அா்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் பணியாற்றும் ஆசிரியா்களின் சேவையை அங்கீகரிக்கும் ஒரு நடவடிக்கையாகவும் இது அமைகிறது என்று அந்த அறிக்கையில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.