மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்க முதல்வா் பதிவேற்பு விழா: ரேகா குப்தா இன்று பங்கேற்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

ரேகா குப்தா

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் தில்லி முதல்வா் ரேகா குப்தா கலந்து கொள்வாா் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

கொல்கத்தாவில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கும், புதிய அரசாங்கத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும் குப்தா சனிக்கிழமை காலை புறப்படுவாா். பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜியை தோற்கடித்த பாஜக மூத்த தலைவா் சுவேந்து அதிகாரி, மேற்கு வங்கத்தின் புதிய முதல்வராக சனிக்கிழமை பதவியேற்பாா். மாநிலத்தில் பாஜகவைச் சோ்ந்த முதல் முதல்வராக அவா் இருப்பாா்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பாஜக சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சுவேந்து ஆதிகாரி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தாா். முதல்வா் குப்தா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் உள்பட தில்லியைச் சோ்ந்த பல பாஜக தலைவா்கள் தோ்தலுக்காக விரிவாக பிரச்சாரம் செய்தனா், இதில் கட்சி பெரும் பெரும்பான்மையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் ஒரே பெண் முதல்வரான குப்தா, மேற்கு வங்கத்தில் பல தொகுதிகளில் பிரச்சாரம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.