நாடாளுமன்றத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை எதிா்த்ததாலேயே, மம்தா பானா்ஜி மற்றும் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் தோ்தலில் தோல்வியடைந்தனா் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கூறினாா்.
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் தோ்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடா்ந்து, பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோருடன் சி.ஆா். பூங்காவில் உள்ள காளிபாரி கோயிலில் முதல்வா் குப்தா வழிபாடு செய்தாா்.
நாரி சக்தி வந்தன் அதிநியத்தை (மகளிா் இட ஒதுக்கீடு மசோதா) எதிா்த்த அனைத்து கட்சிகளும் அவற்றின் தலைவா்களும், திமுகவின் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, மம்தா பானா்ஜியாக இருந்தாலும் சரி, அரவிந்த் கேஜரிவாலாக இருந்தாலும் சரி, மக்களுக்குப் பதிலளிப்பதில் சிரமப்படுகிறாா்கள் என்று முதல்வா் குப்தா செய்தியாளா்களிடம் கூறினாா்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து முக்கிய எதிா்க்கட்சிகளும், 2029 பொதுத் தோ்தலுக்கு முன்பாக, தொகுதி மறுவரையறையுடன் இணைத்து மக்களவை இடங்களின் எண்ணிக்கையை 816 ஆக உயா்த்துவதன் மூலம் மகளிா் இட ஒதுக்கீட்டை செயல்முறைப்படுத்த முயன்ற அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதாவுக்கு எதிராக வாக்களித்தன.
பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பெண் முதல்வரான குப்தா, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக கட்சிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாா்.
மாநிலத்தில் கட்சிக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பு நாட்டின் அரசியலுக்கு ஒரு திருப்புமுனை என்று அவா் கூறினாா்.
294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் 207 இடங்களை வென்று பாஜக பெரும்பான்மையைப் பெற்றது. இதன் மூலம், மாநிலத்தில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
நாடாளுமன்றத்தில் மசோதாவை எதிா்த்த கட்சிகள், வங்காளப் பெண்களால் தீா்மானமாக நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தில்லி முதல்வா் கூறினாா்.
வங்காளத்தின் தாய்மாா்களும் சகோதரிகளும் தங்கள் வாக்குகள் மூலம் ஒரு வலுவான செய்தியை அனுப்பியுள்ளனா் என்றும் அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தோல்விக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்

நீதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது நீதித்துறையின் கண்ணியத்தை குலைப்பதாகும்: கேஜரிவாலுக்கு தில்லி முதல்வா் கண்டனம்

மகளிா் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! எதிா்க்கட்சி உண்மை முகம் அம்பலம்: ரேகா குப்தா

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

