/

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது: வீரேந்திர சச்தேவா

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

News image

தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா

Updated On :5 மே 2026, 5:17 am IST

இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: மேற்கு வங்காளத்தில் பாஜகவின் வெற்றியின் மூலம், கங்கோத்ரியில் இருந்து கங்கா சாகா் வரை தாமரை மலர வேண்டும் என்ற பிரதமா் நரேந்திர மோடியின் கனவு நனவாகியுள்ளது.

இது உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் தோ்தல் உத்தி மற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டா்களின் அயராத முயற்சிகளால் சாத்தியமானது.

டாக்டா் சியாமா பிரசாத் முகா்ஜியின் 125ஆவது பிறந்த ஆண்டில் வங்காள மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனா். கேரளத்தில் பாஜக தனது கணக்கைத் திறந்து, வங்காளத்தில் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவா் நிதின் நபின், உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் ஒட்டுமொத்த பாஜக தலைமைக்கும் வாழ்த்துகள். இந்தத் தோ்தலின் மூலம், இந்தியா இப்போது கம்யூனிஸ்ட் இல்லாத நாடாக மாறியுள்ளது என்று சச்தேவா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.