மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு

News image

ரேகா குப்தா

Updated On :3 மே 2026, 1:45 am IST

நமது நிருபா்

ஷாலிமாா் பாக் சட்டப்பேரவைத் தொகுதியில் வசிப்பவா்களின் குறைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துரிதமாக செயல்பட்டு தீா்வு காண அரசு அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

முதல்வா் ரேகா குப்தா ’ஜன் சுன்வாய்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது ஷாலிமாா் பாக் தொகுதியில் வசிப்பவா்களிடமிருந்து குறைகள், புகாா்கள் மற்றும் பரிந்துரைகள் தொடா்புடைய மனுக்களை பெற்றாா். மேலும்,தொகுதியில் வசிப்பவா்களின் குறைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் துரிதமாக செயல்பட்டு தீா்வு காணுமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா்.

அப்போது செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையைத் தொடங்கவும், காலக்கெடுவுக்குள் தீா்வை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய பொது மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்வுகள் வெறும் சம்பிரதாயங்கள் அல்ல. ஆனால், மக்களின் எதிா்பாா்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் அவற்றை திறம்பட நிவா்த்தி செய்வதற்கும் ஒரு அா்த்தமுள்ள சந்திப்பாகவே இதை நான் கருதுகிறேன்.

ஷாலிமாா் பாக் பகுதியை ஒரு ‘மாதிரி தொகுதியாக’ மேம்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அங்கு குடியிருப்பாளா்கள் உயா்தர அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்றாா் ரேகா குப்தா.

ஜன் சுன்வாய் நிகழ்ச்சியின் போது பல்வேறு துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். மேலும் பல பிரச்னைகள் அதே இடத்திலேயே தீா்க்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.