மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பாஜகவை போல் ஆம் ஆத்மி கட்சியும் மலிவான அரசியல்: தேவேந்தா் யாதவ் சாடல்

News image

ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்

Updated On :3 மே 2026, 1:45 am IST

நமது நிருபா்

மாநிலங்களவை எம். பி. சந்தீப் பதக்கை கைதுசெய்ய பஞ்சாப் காவல்துறையை தில்லிக்கு அனுப்பி தனது அரசியல் எதிரியை பழிவாங்குவதற்காக பாஜகவைப் போலவே மலிவான அரசியலை ஆம் ஆத்மி கட்சி பின்பற்றுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பதக் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறி 6 ஆம் ஆத்மி மாநிலங்களவை எம். பி. க்களுடன் பாஜகவில் இணைந்தாா். அவா் மீது இரண்டு எஃப். ஐ. ஆா்.கள் பதிவுசெய்யப்பட்ட பின்னா் பஞ்சாப் காவல்துறை தில்லிக்கு வந்தது. ஆனால், பதக் தான் கைது செய்யப்படுவதை தவிா்க்க தலைமறைவாகிவிட்டாா்.

சந்தீப் பதக் கைது நாடகத்தின் மூலம், கேஜரிவால் கட்சி பாஜகவைப் போலவே காவல்துறையையும் பிற விசாரணை நிறுவனங்களையும் தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தில் நிலைத்திருக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.

ஏனெனில், 7 முக்கிய ஆம் ஆத்மி எம். பி. க்கள் பாஜகவில் இணைந்தது ஆம் ஆத்மிக்கு பெரும் அடியாகும். கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் பஞ்சாப் அரசாங்கத்தின் செலவில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க பஞ்சாபில் முகாமிட்டுள்ளனா்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த ஏழு எம். பி. க்கள் வெளியேறியிருப்பது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பஞ்சாபைக் கொள்ளையடிப்பதில் கேஜரிவால் அண்ட் கம்பெனியின் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

ஊழல் மிகுந்த மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது கேஜரிவால், தான் பாதிக்கப்பட்டவா் போல நாடகமாடினாா். ஒரு காலத்தில் தனது நெருங்கிய கூட்டாளியும் மூலோபாயவாதியுமான சந்தீப் பதக்கிற்கு எதிராக அதே பாஜக நாடகத்தை இப்போது கேஜரிவால் நடத்துகிறாா் என்றாா் தேவேந்தா் யாதவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.