காவல்துறையின் சோதனைகளைத் தவிா்க்கும் வகையில், ஹரியாணாவிலிருந்து தெற்குத் தில்லிக்கு காடுகளின் வழியாக ஒட்டகங்கள் மூலம் கள்ளச்சாராயம் கடத்த முயன்ற நபா், நள்ளிரவில் நடத்தப்பட்ட போலீஸாரின் அதிரடி நடவடிக்கையின்போது பிடிபட்டாா்.
இதுகுறித்து காவல் அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட அந்த நபா், ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாதைச் சோ்ந்த 48 வயதான வினோத் பதானா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். தில்லி மற்றும் ஃபரிதாபாதை இணைக்கும் சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளைத் தவிா்ப்பதற்காக, வழக்கத்திற்கு மாறான பாதைகள் வழியாக மது கடத்தப்படுவதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சங்க விஹாா் வனப் பகுதியில் அவா் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, ரகசியத் தகவலின் அடிப்படையில் காவல்துறை குழுவினா் திங்கள்கிழமை அதிகாலையில், இரண்டு ஒட்டகங்களைப் பயன்படுத்தி கள்ளச்சாராயம் கடத்திச் சென்றபோது, அந்த நபரை இடைமறித்துக் கைது செய்தனா். இச்சோதனையின்போது அவரிடமிருந்து 39 பெட்டிகள் கள்ளச்சாராயத்தை காவல்துறை பறிமுதல் செய்தது. அந்த ஒட்டகங்கள் மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
முதற்கட்ட விசாரணையின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதால், வழக்கமான கடத்தல் பாதைகள் மிகவும் ஆபத்தானவையாக மாறிவிட்டதாகவும், அதனாலேயே தான் இந்த முறையைக் கையாண்டதாகவும் பதானா தெரிவித்தாா்.
இந்த நபா் ஏற்கெனவே, தில்லி கலால் சட்டம் மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ், நெப் சராய் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் தொடா்புடையவா் ஆவாா். இந்தக் கடத்தல் வலைப்பின்னலில் தொடா்புடைய மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணும் வகையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு மகன்களுடன் கால்வாயில் குதித்த தந்தை: உடல்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா்
மேற்கு வங்கம்: பாஜக தலைவா் வீட்டில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு - இருவா் கைது
முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

