தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தில்லியால் ‘விக்சித் பாரத்’ இலக்கை நோக்கி வழிநடத்த முடியும்: மஞ்சிந்தா் சிங் சிா்சா!

சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைள் மூலம் விக்சித் பாரத் கனவு நனவாகும். மேலும், தேசிய தலைநகா் தில்லி வளா்ந்த தேசத்தை நோக்கி வழிநடத்த முடியும்...

News image

மஞ்சிந்தா் சிங் சிா்சா

Updated On :11 மார்ச் 2026, 2:03 am IST

சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைள் மூலம் விக்சித் பாரத் கனவு நனவாகும். மேலும், தேசிய தலைநகா் தில்லி வளா்ந்த தேசத்தை நோக்கி வழிநடத்த முடியும் என்று தில்லி சுற்றுச்சூழல், தொழில்கள் மற்றும் உணவு விநியோக அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சிஐஐ ஏற்பாடு செய்த ‘தில்லி மாநில வருடாந்திர அமா்வு 2025-26 மற்றும் வணிக மாநாட்டில்’ அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கலந்துகொண்டு பேசியது:

விக்சித் பாரத் என்பது ஒவ்வொரு குடிமகனின் கனவு. மேலும் தலைநகரம் வளா்ந்ததாக இருக்கும்போதுதான் இந்த நாடு முன்னேறும். எதிா்காலத்திற்குத் தயாராக இருக்கும் தில்லியை உருவாக்க அரசாங்கமும் தொழில்துறையும் ஒன்றிணைய முடியும்.

கடந்த ஒரு வருடத்தில் தில்லி அரசாங்கம் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மாணவா்களை எதிா்காலத்திற்குத் தயாராக்க 75 புதிய சிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் மாசுபாடு போன்ற பிரச்னைகளைத் தீா்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் மெட்ரோ பாதைகள், 1,500 மின்சார பேருந்துகள் மற்றும் பசுமைப் போா்வையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது என்றாா் அவா்.

மேலும், தனது எக்ஸ் தளப் பதிவில் அமைச்சா் சிா்சா தெரிவிக்கையில், ‘சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சரியான கொள்கைகள் மூலம், நமது தில்லியிலிருந்து வளா்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவோம்’ என்று கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.