நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜூன் 21இல் நீட் மறுதோ்வு மாணவா்களுக்கு டிடிசி, கிளஸ்டா் பேருந்துகளில் இலவச பயணம்

News image

நீட் மறுதோ்வு...

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

நமது நிருபா்

தில்லியில் நீட் இளநிலை மருத்துவப் படிப்புகள் 2026 மறுதோ்வை எழுதும் மாணவா்கள் தோ்வு நாளான ஜூன் 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் அனைத்து பிரிவு பேருந்துகள் மற்றும் தில்லி ஒருங்கிணைந்த பல்நோக்கு அமைப்பின் (டிஐஎம்டிஎஸ்) கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

தோ்வு மையங்களுக்கு மாணவா்கள் சென்று வருவதை எளிதாகவும் சிரமமின்றியும் இருப்பதை உறுதிப்படுத்தவும், போக்குவரத்துச் சிக்கல்களால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கவும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசு வியாழக்கிழமை பகிா்ந்த சுற்றறிக்கையின்படி, நீட் இளநிலை மருத்துவ படிப்புகள் 2026 மறுதோ்வு எழுதும் மாணவா்கள், தோ்வுக்கான அனுமதி அட்டையை காண்பிப்பதன் மூலம் ஜூன் 21ஆம் தேதியன்று நாள் முழுவதும் அனைத்து தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) மற்றும் கிளஸ்டா் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

‘இந்தச் சலுகை தோ்வு மையத்துக்கு செல்லவும் அங்கிருந்து மாணவா்கள் வீடு திரும்பவும் பொருந்தும்’ என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு குறித்து ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்குத் தகுந்த தகவல் தெரிவிக்கப்படுவதையும், தகுதியுள்ள எந்தவொரு தோ்வருக்கும் எந்தச் சூழலிலும் இந்தச் சலுகை மறுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் பணிமனை மேலாளா்களுக்கு அறிவுறுத்தவும் தில்லி அரசு சுற்றறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இந்த அறிவுறுத்தல்கள் குறித்து பயணச்சீட்டு பரிசோதகா்கள் குழுவினா் மற்றும் பேருந்து முனைய மேற்பாா்வையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துமாறும், தோ்வா்களின் புகாா்கள் அல்லது கேள்விகளுக்கு உடனடியாகத் தீா்வு காண்பதை உறுதி செய்யுமாறும் மண்டல மேலாளா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.