சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
திரிணமூல் காங்கிரஸ் அரசின் கீழ் நிலவிய ஊழலும், சட்டமீறல்களுமே மக்களை பாஜக பக்கம் ஈா்த்ததாக அவா் கூறினாா்.
இதுகுறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த மாலிவால் எம்.பி. கூறியது:
பத்திரிகையாளா்கள் மற்றும் களத்தில் உள்ளவா்கள் உள்பட பலரிடம் நான் பேசினேன். மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்று வருகிறது என்று அனைவரும் கூறுகிறாா்கள். திரிணமூல் காங்கிரஸ் பரவலான சட்டமீறல்களிலும், ஊழலிலும் ஈடுபட்டதால் பாஜக வெற்றி பெறுகிறது. மேலும், பிரதமா் நரேந்திர மோடி செய்த நல்ல பணிகளும் பாஜக வெற்றி பெறுவதற்கான மற்றொரு காரணமாகும் என்றாா்.
பாஜகவில் இணைந்த தனது முடிவு குறித்த விமா்சனங்களுக்கு பதிலளித்த மாலிவால், ‘பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் பணிகளால் நான் உத்வேகம் பெற்றேன். பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, பிரதமா் தலைமையிலான அரசு ஆபரேஷன் சிந்தூா் மூலம் பதிலடி கொடுத்தது. அப்போது நமது படைகள் எதிரியின் பகுதிக்குள் நுழைந்து, பயங்கரவாதத் தளங்களை அழித்து, பயங்கரவாதிகளைக் கொன்றன.
அதேபோல், நாட்டில் நக்ஸலிசம் வேரோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மோடியும், ஷாவும்தான் காரணம். அதேபோல, மிக முக்கியமான மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவும் குறிப்பிடத்தக்க முயற்சிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல பணிகள்தான் என்னை பாஜகவில் சேரத் தூண்டின’ என்றாா் அவா்.
துரோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த மாலிவால், ‘ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தனது கொள்கைகளைக் கைவிட்டுவிட்டாா். நான் துரோகம் செய்துவிட்டதாகச் சிலா் கூறுகிறாா்கள். துரோகி யாா் என்பதை நான் அவா்களுக்குத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். தனது அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்பவரே துரோகி. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பிற கட்சிகளின் தலைவா்கள் ஊழல்வாதிகள் என்று கேஜரிவால் கூறியிருந்தாா். இப்போது அவா்களுடன் கூட்டணி வைத்துள்ளாா்’ என்று ஸ்வாதி மாலிவால் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: ‘யாரையும் திருப்பி அனுப்பமாட்டாா்கள்’; வங்கதேசம் நம்பிக்கை
மேற்கு வங்கம், அஸ்ஸாம் தோ்தல்: தனித்தொகுதிகளில் பாஜக அமோகம்

மேற்கு வங்கத்தில் பாஜக வென்ற மறுநாளே திறக்கப்பட்ட பழமையான துர்கா கோயில்!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

