புது தில்லி : மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாம் சார்ந்திருந்த ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி நிறுவனரும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாா் 2024-இல் முதல்வரின் இல்லத்தில் ஸ்வாதி மாலிவாலைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தருணங்களில் அவர் ஆம் ஆத்மி மீதான விமர்சனத்தையும் பதிவிட்டு வந்தார். மாலிவால் அளித்த பிபவ் குமாருக்கு எதிரான புகாரை வாபஸ் பெற தான் கட்டாயப்படுத்தப்பட்டதாக மாலிவால் தெரிவித்தார். இந்நிலையில், அவர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் சனிக்கிழமை(ஏப். 25) அளித்துள்ளதொரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது : “ஒருபுறம் சீர்கேடான கேஜரிவாலின் ஆட்சி; இன்னொருபுறம் பிரதமர் மோடி, அமித் ஷாவின் தீர்க்கமான தலைமையின்கீழ், நமது நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத மாற்றங்கள்.
இக்கட்சியிலிருந்து மக்கள் அச்சத்தால் விலகவில்லை; அரவிந்த் கேஜரிவால் காரணமாகவே விலகுகின்றனர். வரும் நாள்களில் இக்கட்சியிலிருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள். எந்தவொரு நல்ல மனிதரும் அவருடன்(அரவிந்த் கேஜரிவால்) சேர்ந்து பணியாற்ற முடியாது. அவர் சொல்வதொன்று... செய்வதொன்று.
தன்னை சாமானியராக நிலைநிறுத்தியிருந்த கேஜரிவால் மாறிவிட்டார். எளிமையாக இருந்த அவரது வாழ்க்கைநிலை இன்று மாறிவிட்டது. பஞ்சாப் அரசை ரிமோட் கட்டுப்பாட்டால் இயக்கி வருகிறார். பஞ்சாப் அரசை தில்லியிலிருந்தபடி, ஏடிஎம் போல பயன்படுத்துகிறார்.
கவனமாக ஆராய்ந்தபின்னரே நான் பாஜகவில் இணைந்தேன். இதில், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.
Summary
Defected AAP MP Swati Maliwal on Saturday claimed that more leaders would quit the party in the coming days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறும்: ஸ்வாதி மாலிவால் நம்பிக்கை

பிரதமர் மோடி, அமித் ஷாவால் ஈர்க்கப்பட்டேன்: சுவாதி மாலிவால்!
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

