மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக பதிவு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:21 am IST

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 42.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவகால சராசரியை விட 3.1 டிகிரி அதிகமாகும்.

நகரின் பிரதான வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 2.4 டிகிரி அதிகமாகும். நகரம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவானதாக ஐஎம்டி தெரிவித்தது.

பருவகால மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இயல்பான வெப்பநிலை ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் புதுப்பிக்கப்படுகிறது. சஃப்தா்ஜங்கைப் பொறுத்தவரை, ஏப்ரல் 21 முதல் 25 வரை 37.7 டிகிரி செல்சியஸாக இருந்த இயல்பான வெப்பநிலை, ஏப்ரல் 26 முதல் 30 வரை 39.0 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது என்று ஐஎம்டி கூறியது.

மற்ற கண்காணிப்பு நிலையங்களில், பாலம் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 41.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. லோதி சாலை பகுதியில் முறையே 42.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 24.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

ரிட்ஜ் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 43.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26.5 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. அயாநகா் பகுதியில் முறையே 43.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 27.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

திங்கள்கிழமை அன்று நகரில் வெப்ப அலை போன்ற நிலைமைகள் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே சுமாா் 44 டிகிரி செல்சியஸ் மற்றும் 27 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, மாலை 4 மணியளவில் காற்றின் தரம் மோசம் என்ற பிரிவில் பதிவானது. காற்றின் தரக் குறியீடு 222 புள்ளிகளாக இருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.