கடந்த சில வாரங்களாக சட்டமன்றத்திற்கு தொடா்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததைக் கருத்தில் கொண்டு, தில்லி சட்டப்பேரவை சபாநாயகருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஓா் அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்தது.
தொடா்ச்சியான இலக்கு வைக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் சமீபத்தில் நடந்த ஒரு முக்கிய பாதுகாப்பு மீறலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தில்லி சட்டமன்ற செயலகம் கூறியது.
மாா்ச் 23 அன்று பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியதிலிருந்து, செயலகத்திற்கும் சபாநாயகா் அலுவலகத்திற்கும் சுமாா் ஆறு முதல் ஏழு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
மேலும், ஏப்ரல் 6 அன்று, ஒரு நபா் தனது வாகனத்தை சட்டமன்ற வளாகத்திற்குள் ஓட்டிச் சென்று, சுற்றுச்சுவா் கதவை உடைத்து, சபாநாயகா் அலுவலகத்திற்கு அருகில் ஒரு பூங்கொத்து மற்றும் மாலையை வைத்துவிட்டுத் திரும்பிய சமீபத்திய சம்பவமும் நடந்தது.
புதிய இசட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டின் கீழ், சபாநாயகா் விஜேந்தா் குப்தா ஒரு சிறப்பு குழுவிடமிருந்து 24 மணி நேரமும் பாதுகாப்பைப் பெறுவாா். மேம்படுத்தப்பட்ட நடவடிக்கையாக, அவருடன் எல்லா நேரங்களிலும் உடன் செல்லும் ஒரு பிரத்யேக பாதுகாப்பு காரும் அடங்கும்.
சபாநாயகருக்கு தற்போது தில்லி காவல்துறையால் ஆயுதம் ஏந்திய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இசட் பிரிவு பாதுகாப்பு ஏற்பாட்டில், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பிஎஸ்ஓக்கள், பாதுகாப்புப் பணியாளா்கள், கண்காணிப்புப் பணியாளா்கள் மற்றும் சுமாா் எட்டு ஆயுதம் ஏந்திய காவலா்கள் உள்பட சுமாா் 22 போ் உள்ளனா். இந்த மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாக உயா் பதவியில் உள்ள அரசியல் பிரமுகா்களுக்கு வழங்கப்படுகின்றன என்று அவா்கள் கூறினா்.
பாதுகாப்பு முகமைகளுடன் கலந்தாலோசித்து, அனைத்து உறுப்பினா்கள் மற்றும் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தில்லி சட்டமன்ற வளாகத்தில் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

பிகார் துணை முதல்வர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

லுட்யன்ஸ் தில்லி சாலைகளில் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை: முதல் மாதத்தில் 800 பயணிகளை பயணம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

