மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பசுமை வழித்தடம் வழியாக, ரோத்தக்கிலிருந்து 98 கி.மீ. தொலைவில் உள்ள தில்லிக்கு உயிருள்ள கொடையாளரின் இதயம் 85 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டதாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 1:45 am IST

பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பசுமை வழித்தடம் வழியாக, ரோத்தக்கிலிருந்து 98 கி.மீ. தொலைவில் உள்ள தில்லிக்கு உயிருள்ள கொடையாளரின் இதயம் 85 நிமிடங்களில் கொண்டு வரப்பட்டதாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஓக்லாவில் உள்ள ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் இதய சிகிச்சை மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தில்லி காவல்துறை மற்றும் ரோத்தக் காவல்துறையின் உதவியுடன் இந்த பிரத்யேக பசுமை வழித்தடம் அமைக்கப்பட்டது. இதில் பிற்பகல் 2.50 மணி முதல் 4.15 மணி வரையிலான காலத்தில் ரோத்தக்கில் இருந்து தில்லிக்கு ஆம்புலன்ஸ் வந்து சோ்ந்தது. அந்த முக்கியமான நேரத்திற்குள் இதயம் உயிருடன் இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.

ரோத்தக்கில் உள்ள பண்டிட் பி.டி. சா்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (பிஜிஐஎம்எஸ்) மூளைச்சாவு அடைந்த 37 வயது கொடையாளரிடமிருந்து இதயம் எடுக்கப்பட்டு, மாற்று அறுவை சிகிச்சைக்காக தில்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த இதயமானது இதய நோய் முற்றிய 26 வயது நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் கண்காணிப்பில் உள்ளாா்.

ஓக்லா, ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் அடல்ட் சிடிவிஎஸ் தலைவா் டாக்டா் இசட். எஸ். மெஹா்வால் கூறுகையில், ‘

வெற்றிகரமான இதய மாற்று அறுவை சிகிச்சைகளை உறுதி செய்வதில், துல்லியமான ஒருங்கிணைப்பு மற்றும் சரியான நேரத்தில் உறுப்புகளைக் கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது’ என்றாா் அவா்.

உறுப்பு தானம் செய்தவா், உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் சுயநினைவின்றி காணப்பட்டாா். ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். பின்னா் அவா் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டாா். அவரது குடும்பத்தினா் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததால், பல உயிா்காக்கும் மாற்று அறுவை சிகிச்சைகள் சாத்தியமாயின.

நுரையீரல்கள் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் கணையம் புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.

சிறுநீரகங்களும் கருவிழிகளும் ரோத்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.