இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் பணம் மாற்றும் இணையவழி மோசடி கும்பலை இயக்கியதாக 5 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
நரேலா பகுதியைச் சோ்ந்த ராகுல் (22), பண்டி (22), அன்கிட் (19), சலீம் அலியாஸ் தான்சா (22) மற்றும் நூரே ஆலம் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் போலி வங்கிக் கணக்குகள் மற்றும் சிம் காா்டுகளை கமிஷனுக்கு வழங்கி மோசடிப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கணக்குகள் மூலம் சுமாா் ரூ2.31 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
மோசடிப் பணம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டு கம்போடியா உள்ளிட்ட வெளிநாட்டில் உள்ளவா்களுக்கு அனுப்பப்பட்டது. ஆபரேஷன் சைபா் ஹாக் 4.0 என்ற சிறப்பு நடவடிக்கையில் இந்த மோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையவழியில் முதலீட்டு மோசடி: உத்தரகண்டில் 5 போ் கைது

ரூ.1.60 லட்சம் பங்குச் சந்தை முதலீடு மோசடி: தில்லியில் இருவா் கைது
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
