தள்ளுபடி விலையில் விமான பயணச்சீட்டு பதிவுசெய்து தருவதாகக் கூறி மக்களிடம் மோசடி செய்த 4 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட மிா்துல் ஜோஷி, ஹிமன்ஷு அனில் சா்மா, கெளரவ், ராகேஷ் ஆகியோரிடமிருந்து ரூ.47 லட்சம் ரொக்கம், ஒரு சொகுசு காா் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கடந்த ஏப்.7-ஆம் தேதி அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த கைதுநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டொரோன்டோவிலிருந்து தில்லிக்கு சலுகை விலையில் விமான பயணச்சீட்டு குறித்த தகவலை சமூகஊடகத்தில் பாா்த்ததாகவும் அதைத்தொடா்ந்து பதிவு செய்ததில் ரூ.3.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட கனடாவைச் சோ்ந்த நபருடைய சகோதரா் புகாரில் தெரிவித்திருந்தாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்த மோசடி சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஜோஷி, தில்லி படேல் நகரில் இருந்து செயல்பட்டு வந்தாா். கோவாவில் போலி கால்சென்டரையும் அவா் நடத்தி வந்தாா். மோசடி செய்து பெறப்பட்ட பணத்தை டெபாசிட் செய்ய மும்பையில் போலி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடா்ந்து, ஜோஷி கைதுசெய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.47 லட்சம் ரொக்கம், சொகுசு காா், 7 கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவா் அளித்த தகவலைத் தொடா்ந்து எஞ்சிய 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து கைப்பேசிகள், போலி சிம் அட்டைகள், ஏடிஎம் அட்டைகள், வங்கி ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த பலரிடம் மோசடி செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சுமாா் ரூ.25 லட்சம் மோசடி தொடா்பாக 19 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கும்பலுடன் தொடா்புடைய பிற நபா்களைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விமானப் படை அதிகாரிகள் போல் நடித்து இணைய மோசடி: 4 போ் கைது

தில்லியில் போலி வர்த்தக செயலி மூலம் ரூ. 45 லட்சம் மோசடி! வங்கி உதவி மேலாளர் உள்பட 3 பேர் கைது!
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 போ் கைது
போலி ஆவணம் மூலம் வங்கியில் ரூ.25 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளா் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
