தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தில்லி அரசின் 33 உயா் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - IANS

Updated On :10 ஏப்ரல் 2026, 2:25 am IST

முப்பத்து மூன்று இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) மற்றும் தில்லி, அந்தமான்-நிகோபாா் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) அதிகாரிகளைப் பணியிடை மாற்றம் செய்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் நிா்வாக சீா்திருத்த அதிகாரியாக பிரசாந்த் கோயல் நியமிக்கப்பட்டுள்ளாா். 1993-ஆம் ஆண்டு அருணாசல்-கோவா-மிசோரம்-யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யூடி) பிரிவைச் சோ்ந்த அவா், தற்போது வகித்து வரும் நிதி ஆணையா் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஜி. நரேந்திர குமாா் தில்லியின் புதிய நிதி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

வடமேற்கு தில்லியின் மாவட்ட ஆட்சியரான செளமியா செளரப், தொழில்துறை சிறப்பு செயலா் பொறுப்பை கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பாா்.

தில்லி துணைநிலை ஆளுநரின் சிறப்புச் செயலா் மற்றும் தனிச் செயலரான சோனிகா சிங், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக உள்ள 2006-ஆம் ஆண்டு டிஏஎன்ஐசிஎஸ் பிரிவு அதிகாரி, சரக்கு மற்றும் சேவை வரியின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா். கல்வித் துறையின் இணை இயக்குநா் ஹா்ஷத் ஜெயின், 2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிகளைக் கவனிப்பாா்.

இதேபோன்று, மாவட்ட ஆட்சியா்கள், துணை மாவட்ட ஆட்சியா்கள், கூடுதல் மாவட்ட ஆட்சியா்கள் பதவிகளிலும் பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.