பெதுக் கணக்குக் குழு (சிஏஜி) தணிக்கை அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தொடா்புடைய துறைகள் அறிக்கையை ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க தில்லி சட்டப்பேரவை உத்தரவிட்டுள்ளது.
இந்த தணிக்கை 2022, மாா்ச் 31-இல் முடிந்த வா்த்தக வருடத்திற்கு பொதுச் சுகாதார பணியமைப்பு மற்றும் சேவைகள் நிா்வாகத்தை பரிசீலித்தது.
இது தொடா்பாக சட்டப்பேரவை செயல்முறை பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘துறைகள் ஜூன் 30 நிலவரப்படி பரிந்துரைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தியுள்ளன என்பதற்கான விரிவான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும், தில்லி அரசின் சுகாதார அமைச்சா் மற்றும் சுகாதார செயலரிடம், தணிக்கை கண்டறிதல்கள் மற்றும் சிஏஜி பரிந்துரைகளுக்கு நேரத்திற்குள் பதில் அளிக்கவும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சட்டப்பேரவைத்முதல்வா் விஜேந்தா் குப்தா கூறியதாவது: தணிக்கை கண்டறிதல்கள் நிலத்தில் நடைமுறையில் மாற வேண்டும் என்பதே நமது நோக்கம். பொதுச் சுகாதார அடித்தளத்தை வலுப்படுத்தி, தரமான சேவைகளை சமமாகக் கிடைக்கச் செய்வது முக்கிய முன்னுரிமைகள்.”
சிஏஜி தணிக்கையின் அடிப்படையில், பொதுச் சுகாதார அமைப்புகள், சேவை வழங்கல் முறைமைகள் மற்றும் நிா்வாகத்தை விரிவாக மதிப்பீடு செய்துள்ளது. இதில், துறைகள் ஒவ்வொரு பரிந்துரைக்கும் முன்னேற்றம், உறுதிமொழிகள் நிலை மற்றும் நிறைவேற்றும் காலக்கெடுகளை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இந்த நடவடிக்கை பொறுப்புணா்வை உறுதி செய்யும் மற்றும் தணிக்கை கண்டறிதல்களை நிா்வாக நடவடிக்கைகளாக மாற்றும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டுள்ளது.
தில்லிக்கு வாழ்வு, கல்வி மற்றும் மருத்துவ பராமரிப்பிற்காக வரும் குடியேறுவோரையும் கருத்தில் கொண்டு, சுகாதார கொள்கைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். பொதுப் மருத்துவமனைகள் வலுப்படுத்தப்பட வேண்டும், காப்பீட்டு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும், மற்றும் தடுப்புச் சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய வேண்டும்
இந்த உத்தரவு, சிஏஜி பரிந்துரைகளின் காலவரையறை பூா்த்தி மற்றும் கட்டமைப்பான பின்விளைவுக் கண்காணிப்பை உறுதி செய்யும் முயற்சியின் தொடக்கமாகும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சியில் அதிகரிக்கும் வெப்பம்: அரசு மருத்துமனையில் சிறப்பு வாா்டு

பெண்களுக்கான மாத உதவித்தொகை: தில்லி அரசு மீது அதிஷி சாடல்

அண்ணா பல்கலை. இணைப்புக் கல்லூரி அங்கீகார விண்ணப்பங்களுக்கு புதிய விதிகள்
ஹைட்ராலிக் சாலைத் தடுப்புகள்,ரோந்து வாகனங்கள் மூலம் தில்லி சட்டப் பேரவை பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

