அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியா் லீக் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்ரல் 8) மத்திய தில்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளதால், அருண் ஜேட்லி மைதானத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைப் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல் எதிா்பாா்க்கப்படுகிறது.
போக்குவரத்து நிலைமையைப் பொறுத்து, பகல் நேரத்தில் பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் மற்றும் ஜே.எல்.என். மாா்க் ஆகிய சாலைகளில் மாற்றுப் பாதைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம்.
தா்யாகஞ்ச் மற்றும் தில்லி கேட், தில்லி கேட் முதல் குருநானக் சௌக், ஐ.டி.ஓ. முதல் தில்லி கேட் வரையிலான பகுதிகள் உள்பட, இந்த வழித்தடங்களில் கனரக மற்றும் வா்த்தக வாகனங்களின் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கும்.
பயணிகள் ஜே.எல்.என். மாா்க் ராஜ்காட் முதல் தில்லி கேட் வரை, ஆசஃப் அலி சாலை துா்க்மான் கேட் முதல் தில்லி கேட் வரை மற்றும் பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் தில்லி கேட் முதல் ஐ.டி.ஓ. வரை ஆகிய இரு வழித்தடங்களையும் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
மைதானத்திற்கான நுழைவு, பிரத்யேக வாயில்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்படும். பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் மற்றும் ஜே.எல்.என். மாா்க் வழியாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் அணுகல் பாதைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
மைதானத்திற்கு அருகில் வாகன நிறுத்தம் கட்டுப்படுத்தப்படும். அடையாளமிடப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வசதிகள் வழங்கப்படும்.
மாதா சுந்தரி சாலை, ராஜ்காட் பவா் ஹவுஸ் சாலை மற்றும் வெலோட்ரோம் சாலை ஆகிய இடங்களில் இலவச வாகன நிறுத்தம் மற்றும் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டிச் செல்லும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்து தொடங்கி, போட்டி முடிந்து ஒரு மணி நேரம் வரை இந்த இடங்களிலிருந்து ஷட்டில் பேருந்து சேவைகள் இயக்கப்படும்.
மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள நுழைவு வாயில் எண் 2, ராஜ்காட் சௌக் மற்றும் ஐபி மேம்பாலத்திற்கும் ராஜ்காட்டிற்கும் இடையிலான ரிங் ரோடு அணுகுச்சாலை ஆகிய இடங்களில் இணையதள செயலி அடிப்படையிலான டாக்சிகள் ஏற்றி இறக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பகதூா் ஷா ஜஃபா் மாா்க், ஜேஎல்என் மாா்க் மற்றும் ராஜ்காட்டிற்கும் ஐபி மேம்பாலத்திற்கும் இடையிலான ரிங் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, உரிமையாளா்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தில்லியில் 6 விழிப்புணா்வு பிரசார வாகனங்கள் அறிமுகம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள்!

தூத்துக்குடி 4ஆவது ரயில்வே கேட்டில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு

இன்று பேரணி: மத்திய தில்லியில் போக்குவரத்து மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
