சூடானின் வடக்கு டர்பரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 30 பேர் பலியாகினர், பலர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலுக்கு ராணுவப் படைகளே காரணம் என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வடக்கு டர்பரில் உள்ள குடும் நகரில் வியாழக்கிழமை திருமணம் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அந்த திருமண நிகழ்ச்சியை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 30 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபான் டுஜாரிக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா., பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு அரசின் ராணுவப் படைகளே காரணம் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன, ஆனால் ராணுவத்திடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சூடானின் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் போரின் பின்னணியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 40,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
At least 30 civilians were killed in a drone strike on the city of Kutum in North Darfur. Among the victims were women and children
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 பேர் பலி! போர்நிறுத்தம் முறிவு?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே டிரோன்: 3 பேர் கைது

சூடானில் மருத்துவமனை மீது துணை ராணுவப் படை தாக்குதல்! 10 பேர் பலி!

பாகிஸ்தானில் டிரோன் தாக்குதல்: 4 பேர் காயம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


