மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஹெலிகாப்டர் அருகே டிரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சனிக்கிழமை மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மமதா, கஜோலுக்குச் செல்வதற்காக ஹெலிகாப்டரில் ஏறத் தயாராக இருந்தபோது, அந்தப் பகுதியை படம் பிடிப்பதற்காக இந்த டிரோன் இயக்கப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.
இது குறித்து அதிகாரி கூறுகையில்: "சனிக்கிழமை முதல்வர் ஹெலிகாப்டர் புறப்படும்போது அதன் அருகே டிரோன் வந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது."
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் டிரோன் பறக்கவிடுவதற்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சில உள்ளூர் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நூர் அக்தர் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றுவதற்காக காட்சிகளை எடுக்கவே டிரோன் பறக்கவிடப்பட்டது," என்றார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன.
Summary
Three persons have been arrested after a drone was spotted flying near the helicopter of West Bengal Chief Minister Mamata Banerjee in Malda district, an official said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

பாஜக சொல்வதை அதிகாரிகள் செய்கிறார்கள்! என் கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா

90 லட்சம் வாக்குகள் நீக்கம்! பாஜகவுக்கு மேற்கு வங்கம் பதிலடி கொடுக்க வேண்டும்!

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

