கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான 2 ஒப்பந்த ஊழியர்களின் உடல்கள் 8 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாநகராட்சி 69-ஆவது வார்டு சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் உள்ள 15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட கழிவுநீர் தொட்டியில் பொருத்தப்பட்டிருந்து 60 எச்.பி மோட்டார் பழுதானது.
இதையடுத்து ரத்தினபுரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அர்ஜுன்குமார் (38), பாப்பம்பட்டியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சுரேஷ் (27) இருவரும் மோட்டார் பழுதை சரிசெய்து பொருத்திவிட்டு மேலே ஏறியபோது, ஒப்பந்த ஊழியர் அர்ஜுன்குமார் எதிர்பாராதவிதமாகத் தலை இடித்துத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியரான எலக்ட்ரீசியன் சுரேஷ் அவரை மீட்பதற்காக கீழே இறங்கிய போது, நச்சு வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி அவரும் 40 அடி ஆழக் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.
8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடல்கள் மீட்பு
தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவு நீரை வெளியேற்றி சுமார் 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உடல்களை மீட்டனர்.
இதற்கிடையே, கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மீட்புப் பணிகளை பார்வையிட்டதுடன், கண்ணீருடன் காத்திருந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Summary
Two Workers Die After Falling into Sewage Tank: Bodies Recovered After 8-Hour Struggle...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீரில் பாலம் இடிந்து விழுந்து 3 போ் உயிரிழப்பு: 12 மணி நேர தேடுதலுக்குப் பிறகு உடல்கள் மீட்பு

மணிப்பூர்: குண்டுவீச்சுத் தாக்குதலில் பலியான குழந்தைகளின் உடல்கள் ஒப்படைப்பு

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


