தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

மதுவை கீழே ஊத்தாதீங்க.. போராட்டத்துக்கு நடுவே கெஞ்சிய மதுப்பிரியர்!

மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடிய மதுப்பிரியர்.

News image

கீழே ஊத்தாதீங்க என கடுமையாக போராடிய மதுப்பிரியர்.

Updated On :23 ஜூன் 2024, 12:23 pm IST

மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை, மதுப்பிரியர் ஒருவர் மதுவை 'கீழே ஊத்தாதீங்க' என கடுமையாக போராடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து திமுகவினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக்கில் இருந்து மது பாட்டில்களை வாங்கி ஊர்வலமாக வந்த பாஜகவினர், மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.

அப்போது, பாஜகவினர் கீழே கொட்டியதை பார்த்த மதுபிரியர் ஒருவர் மதுவை 'கீழே ஊத்தாதீங்க' என கடுமையாக போராடினார்.

இந்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நகைப்புக்கு உள்ளாக்கியதோடு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.