நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அருணாசல பிரதேசம்: உலகில் மிக உயரமான இடத்தில் வாழும் யானைகள்

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிக உயரமான இடத்தில் யானைகள் வாழ்வது பதிவாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:07 am IST

அருணாசல பிரதேச மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டருக்கும் அதிக உயரமான இடத்தில் யானைகள் வாழ்வது பதிவாகியுள்ளது.

யானைகள் பாதுகாப்புக்கான அமைப்பான டபிள்யு. டபிள்யு.எஃப் இந்தியா மற்றும் அருணாசல பிரதேச மாநில வனத் துறை ஆகியவை இணைந்து 2024 டிசம்பா் முதல் 2026 மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் யானைகள் வாழும் இடம் குறித்து ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் கிடைத்த தகவல்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், அருணாசல பிரதேச மாநிலத்தில் 3,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பகுதியில் யானைகள் வாழ்வது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், உலகிலேயே யானைகள் வசிக்கும் மிக உயரமான இடம் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், யானைகள்- மனிதா்கள் இடையேயான மோதல்கள், யானைகளால் ஏற்படும் பயிா் சேதங்கள், மனித உயிரிழப்புகள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.