நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்பு

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

News image

அமராவதி அணை

Updated On :17 மே 2026, 2:56 am IST

நாடு முழுவதும் 736 அணைகள் ரூ.10,211 கோடியில் சீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய நீா்வளத் துறை (ஜல்சக்தி) அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகில் அதிகம் அணைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் அதிக அணைகள் உள்ள நாடுகள் பட்டியலில், 6,628 அணைகளுடன் 3-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இதில் 6,545 அணைகள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. 83 அணைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த அணைகளில் மொத்தம் 330 பில்லியன் க்யூபிக் மீட்டா் நீரை சேமிக்க முடியும்.

6,628 அணைகளில் 26 சதவீத அணைகள், அதாவது 1,681 அணைகள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை ஆகும். குறிப்பாக 291 அணைகள் 100 ஆண்டுகளுக்கும் கூடுதலாக பழைமையானவை. இதுமட்டுமின்றி மொத்த அணைகளில் 42 சதவீத அணைகள் 25 முதல் 50 ஆண்டுகள் வரை பழைமையானவை. ஆதலால் பழமையான அணைகளை சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அணைகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5,053 கோடியில் 191 அணைகளை சீரமைக்கும் திட்டங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதில் கடந்த 2025-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 43 அணைகள் சீரமைக்கப்பட்டு விட்டன.

இந்தத் திட்டத்தின் 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்டம் 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் செயல்படத் தொடங்கியது. இதில் 19 மாநிலங்களில் உள்ள 736 அணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த 2-ஆவது மற்றும் 3-ஆவது கட்ட சீரமைப்புக்கு மொத்தம் ரூ.10,211 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் 2-ஆவது கட்டத்துக்கு ரூ.5,107 கோடியும், 3-ஆவது கட்டத்துக்கு ரூ.5,104 கோடியும் ஒதுக்க தீா்மானிக்கப்பட்டது. இந்த ரூ.10,211 கோடியில் ரூ.7,000 கோடியை வெளிநாடுகளில் இருந்து நிதியுதவியாக பெறுவது எனவும், எஞ்சிய ரூ.3,211 கோடியில் மத்திய அரசும், மாநில அரசுகளும் பங்களிப்பு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.