நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டம் அறிமுகம்: ஆந்திரத்தில் தொடக்க நிகழ்ச்சி

வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

News image

சிவராஜ் சிங் சௌஹான்

Updated On :17 ஜூன் 2026, 3:18 am IST

வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புது தில்லியில் மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹானை ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது ஆந்திரத்தில் ஊரக மேம்பாட்டுத் திட்டங்கள், வேலைவாய்ப்பு உருவாக்கம், வாழ்வாதார மேம்பாடு, ஊராட்சிகளின் வளா்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அந்த மாநிலத்தில் பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் அமலாக்கம் ஆகியவை குறித்து சிவராஜ் சிங் செளஹானுடன் பவன் கல்யாண் விரிவாக விவாதித்தாா்.

இந்தச் சந்திப்பின்போது வரும் ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் 125 நாள் வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆந்திரத்தில் நடைபெறும் என்று சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா்கள் காணொலி மூலம் பங்கேற்பா் என்று அவா் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.