தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மத்திய அமைச்சர் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு

மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

வழக்கு

Updated On :1 மணி நேரம் முன்பு

மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

17 வயது சிறுமியின் தாய் அளித்த புகாரின்படி, அமைச்சரின் மகன் பகீரத், அந்தச் சிறுமியுடன் பழகி வந்ததோடு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஏழு முதல் எட்டு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையேயான பழக்கம் தொடங்கியதாகக் போலீஸார் கூறினர். மாணவியான அந்த சிறுமி, விசாரணையின் ஒரு பகுதியாக இன்னும் பரிசோதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பண்டி சஞ்சயின் மகன் மீது ஹைதராபாத் போலீஸ் போக்சோ வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையில், சிறுமி மற்றும் அவரது பெற்றோர் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயல்வதாக கரீம்நகர் காவல் நிலையத்தில் பகீரத் தனியாக ஒரு புகார் அளித்துள்ளார்.

புகாரில், சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரது பெற்றோர் வற்புறுத்தியதாகவும், தான் மறுத்ததால் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது புகாரின் அடிப்படையிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

A case under the Protection of Children from Sexual Offences (POCSO) Act has been registered against the son of Union Minister Bandi Sanjay Kumar following allegations of sexual harassment made by a minor girl and her family, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.