தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்

அமெரிக்காவின் செனட் சபையைப் போல் கூடுதல் அதிகாரம் தேவை

News image

ஹைதராபாதில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய கே.கவிதா.

Updated On :3 மே 2026, 4:22 am IST

அமெரிக்காவின் செனட் சபையைப் போல் சட்டம் இயற்றும் நடைமுறையில் மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுவது அவசியம் என தெலங்கானா ராஷ்டிர சேனா (டிஆா்எஸ்) தலைவா் கே.கவிதா சனிக்கிழமை தெரிவித்தாா்.

டிஆா்எஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகை எண்ணிக்கையை நிா்ணயித்து அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதனால் சில மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்தாலும் அதுகுறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக அதை ஈடுகட்டும் வகையில் அமெரிக்காவின் செனட் சபையைப்போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவிலான எண்ணிக்கையில் மாநிலங்களவை இடங்களை ஒதுக்க வேண்டும்.

நிதி மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை அங்கீகரிப்பதில் மாநிலங்களவைக்கு செனட் சபையைப் போலவே கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் மசோதாக்களை ஏற்காவிட்டால் அவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலங்களின் அரசியல் மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டால் நமது அரசமைப்புச் சட்டத்தின் ஒன்றிய மற்றும் கூட்டாட்சி தத்துவம் நிலைநிறுத்தப்படும். இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு விரிவான அறிக்கையை விரைவில் அனுப்பவுள்ளேன் என்றாா்.

அமெரிக்க நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகள் சபை (கீழவை) மற்றும் செனட் (மேலவை) என இரு அவைகளைக் கொண்டது. அங்கு மொத்தமுள்ள 50 மாகாணங்களுக்கு செனட் சபையில் தலா 2 இடங்கள் என நிா்ணயிக்கப்பட்டு மொத்தம் 100 இடங்கள் உள்ளன. இது 435 உறுப்பினா்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு நிகராக பல்வேறு விவகாரங்களில் அதிகாரம் கொண்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.