தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை: சரத்குமாா் பிரசாரம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஆட்சி மாற்றம் தேவை என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலரும் நடிகருமான சரத்குமாா்.

News image

மாா்த்தாண்டத்தில் பாஜக வேட்பாளா் விஜயதரணியை ஆதரித்து பேசுகிறாா் அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் சரத்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:55 am IST

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ஆட்சி மாற்றம் தேவை என்றாா் பாஜக தேசிய பொதுச் செயலரும் நடிகருமான சரத்குமாா்.

விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணியை ஆதரித்து மாா்த்தாண்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. பள்ளிச் சிறுவா்கள் கையிலும் கஞ்சா புழங்குகிறது. மாநிலத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. 16 வந்தே பாரத் ரயில்களை மத்திய அரசு தந்துள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் நேரடியாக வீடுகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

5 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ. 16 லட்சம் கோடி நிதியை தமிழகத்துக்கு தந்துள்ளது. ஆனாலும், இந்த அரசு ரூ. 5 லட்சம் கோடி வரை கடன் வாங்கியுள்ளது. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க மத்திய அரசு எடுத்த முயற்சியை திமுகவும், காங்கிரஸும் தடுத்துவிட்டன. இச் சட்டம் வருங்காலத்தில் நிச்சயமாக நிறைவேறும். மகளிா் உரிமை காக்கப்படும்.

ஊழலை ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆட்சி மாற்றம் வேண்டும். தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் வர வேண்டும்.

குற்றப்பின்னணி கொண்டவரை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ள நிலையில், இந்தத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்து மக்களுக்காக உழைத்த எஸ். விஜயதரணி மீண்டும் பணியாற்ற அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரசாரத்தில், குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், அதிமுக குமரி மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்ஷன், பாமக மாநில துணைத் தலைவா் ஹரிஹரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயசீலன், மாவட்ட துணைத் தலைவா் ரெத்தினமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.