இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அரசின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் டிரம்ப் பேசியதாவது, "நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன்.
இந்தியாவைப் பொருத்தவரையில், நான் 3 கோடி முதல் 5 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கூறினார். ஆனால், எண்ணிக்கை அவர் கூறுவதைவிட அதிகமாக இருந்திருக்கலாம்.
இரண்டு அணுசக்தி நாடுகள் மோதிக் கொண்டிருந்தன. 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனால், நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால், உங்கள் மீது வரியை விதிப்பேன் என்று நான் கூறினேன்.
‘ஐயோ, தயவுசெய்து அப்படிச் செய்யாதீர்கள்,’ என்று அவர்கள் சொன்னார்கள். வரிகளை விதித்து சண்டையைத் தீர்த்து வைத்தேன்" என்று தெரிவித்தார்.
2025 ஏப்ரலில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இதனையடுத்து, 2025 மே மாதத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது.
தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையேயான போரை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியதால், இந்தியா போரை நிறுத்திக் கொண்டது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறினார். இந்தியா போர் குறித்த டிரம்ப்பின் பேச்சுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.
இருப்பினும், போரை நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக இதுவரையில் 80-க்கும் மேற்பட்ட முறை டிரம்ப் கூறிவிட்டார்.
Summary
US President Donald Trump once again claims he stopped India - Pakistan tensions with tariff threat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு!

ஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் அதிருப்தி
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

