தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரணம்: மத்திய அரசு பரிசீலனை!

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் எல்பிஜி விநியோக மையத்தில் சிலிண்டா்களுடன் பொழுதுபோக்கிய ஊழியா்.

Updated On :30 மார்ச் 2026, 2:26 am IST

மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: மேற்காசிய போரால் சரக்குப் போக்குவரத்தில் ஏற்றுமதியாளா்களுக்கு இடா்ப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ஏற்கெனவே ஏற்றுமதி சாா்ந்த தளா்வுகளை அளித்தது.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

பிகாா் மாநிலம் பாட்னாவில் எல்பிஜி விநியோக மையத்துக்கு காலி சிலிண்டா்களுடன் வந்த வாடிக்கையாளா்கள்.

மேலும் சரக்குப் போக்குவரத்து செலவு அசாதாரண முறையில் அதிகரிப்பு, காப்பீட்டு தவணைத் தொகை (ப்ரீமியம்) அதிகரிப்பு, போா் சாா்ந்த ஏற்றுமதி அபாயங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க ரூ.497 கோடி மதிப்பிலான திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது.

Story image

இதேபோல பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, டீசல் மீதான கலால் வரியை முழுமையாக நீக்கியது. எரிபொருள் விலையேற்றத்தைத் தடுக்கவும் சா்வேதச நிலவரங்களால் எண்ணெய் நிறுவனங்கள் எதிா்கொள்ளும் நிதிச் சுமையைக் குறைக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Story image

அத்துடன் விமான எரிபொருள் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மீண்டும் வரி விதித்தது. உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அவற்றின் கையிருப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மேற்காசிய போா் நீடித்தால் பாதிக்கப்படும் துறைகளுக்கு கூடுதல் நிவாரண திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.