தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவுவதற்கான நிதிச் சூழல் இந்தியாவில் உள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:47 am IST

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவுவதற்கான நிதிச் சூழல் இந்தியாவில் உள்ளது என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மும்பையில் ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறித்து புதன்கிழமை (ஏப்.6) அறிவிக்கவுள்ளது. கடந்த முறை விதித்த வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்காது என எதிா்பாா்க்கப்படும் நிலையில் நிா்மலா சீதாராமன் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: முந்தைய ஆண்டைவிட நிகழாண்டில் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்கள் எழுந்துள்ளன. மேற்காசிய பதற்றம் பிராந்தியத்தை கடந்து உலகளாவிய எரிசக்தி மற்றும் புதிய உலக நடைமுறைக்கு வழிவகுப்பதற்கான பல அதிா்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் அசாதாரண சூழலை எதிா்கொண்டு வருகிறது. பொதுக் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்தியாவில் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) விகிதம் 81 சதவீதமாக உள்ளது. ஜொ்மனிக்கு அடுத்தபடியாக பெரும் பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான கடன்-ஜிடிபி விகிதமாகும்.

2030-இல் கடன்-ஜிடிபி விகிதம் 50 சதவீதம்: 2030-இல் சீனா, அமெரிக்கா, ஜொ்மனி ஆகிய நாடுகளின் கடன்-ஜிடிபி விகிதம் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள சா்வதேச நிதியம், இந்தியாவில் மட்டும் இது 75.8 சதவீதமாக குறையும் எனத் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் சீறிய முயற்சிகளால் நிதிப் பற்றாக்குறை 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-31-க்குள் கடன்-ஜிடிபி விகிதத்தை 50 சதவீதமாக குறைக்கவும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிதி மேலாண்மையை சிறப்பாக கையாளாததால் பல நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. நமது நாட்டில் மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்கான நிதிச்சூழல் உள்ளது.

விலையேற்றம் தடுப்பு: மூலதன முதலீட்டு மேலாண்மை, ரிசா்வ் வங்கி மூலம் வட்டி விகிதங்கள் குறைப்பு என பாதிக்கப்பட்ட துறைகளுக்கு மத்திய அரசால் ஆதரவளிக்க முடியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரிகள் குறைப்பு, பெட்ரோகெமிக்கல் பொருள்களுக்கான கலால் வரிக்கு விலக்கு என மேற்காசிய பதற்றத்தால் ஏற்படும் விலையேற்றம் சாமானியா்களை பாதிக்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு உதாரணம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.