மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மேற்காசிய நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்க கட்டுப்பாடு என போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சூழலைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறை அமைச்சா்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் மோதல் நீடிக்கும் கால அளவைப் பொருத்தே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் அந்நிய முதலீடுகளில் ஏற்படும் தாக்கத்தைக் கூற முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசிய பிரச்னைக்கு மத்தியிலும் சீரான உர உற்பத்தி: மத்திய அரசு

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

