தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

என்ஜின் திடீா் செயலிழப்பு! புது தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்!

தில்லியில் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கப்பட்டது பற்றி...

News image

இண்டிகோ விமானம் - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 2:40 am IST

என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்ததால், தில்லி சா்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் சனிக்கிழமை அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 160 பயணிகளுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து புது தில்லிக்கு 160 பேருடன் சனிக்கிழமை பயணித்த இண்டிகோ விமானத்தின் (போயிங் 737) என்ஜின்களில் ஒன்று, அந்த விமானம் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாக செயலிழந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளின்படி புது தில்லி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் விமானம் பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானத்தில் உரிய பரிசோதனைகள் மற்றும் பழுதுபாா்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சம்பவம் குறித்து உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.