தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு 4 இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள்: கர்நாடக அரசு பரிசீலனை

கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து துணை முதல்வர் சிவகுமார் பரிசீலனை

News image

சின்னசாமி திடல் - கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 2:13 pm IST

கர்நாடகத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இலவச ஐபிஎல் டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் சின்னசாமி திடலில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் எம்எல்ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்குவது குறித்து மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், ”இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திடம் பேசவுள்ளேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டு தருவதை உறுதி செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவையில் ”மாநிலத்தில் எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் டிக்கெட்டுகள் வழங்கவில்லை. அவர்கள் விஐபி-க்கள் என்பதால், வரிசையில் நிற்க முடியாது. அவர்களுக்கு தனி இருக்கை அமைப்புகளை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். திடலில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக தனி ஓய்வறை அமைக்க வேண்டும்.

அரசிடமிருந்து கிரிக்கெட் சங்கம் அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், அவர்கள் எம்எல்ஏ-க்களை மதிப்பதில்லை.

அவர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள், அந்தளவுக்கு அவர்கள் பெரியாளாகி விட்டனர். பணத்தை வாங்கி அனுபவித்து வருகிறார்கள்.

நாங்கள் அவர்களுக்கு 16.32 ஏக்கர் நிலத்தை மாதம் சுமார் ரூ. 1,600-க்கு வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் வசூலிக்கின்றனர். அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. இருப்பினும், நம்மைச் சுரண்டுகின்றனர்” என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதித்தனர்.

Summary

Will speak to KSCA officials, says Shivakumar on Karnataka MLAs' demand for IPL tickets

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.