ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை ஒத்திவைப்பு!

ராகுல் காந்தி மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு..

News image

ராகுல் காந்தி - கோப்புப்படம்

Updated On :27 மார்ச் 2026, 3:37 pm IST

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஸ்ரீ ராம நவமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, அடுத்த விசாரணை மார்ச் 28 (நாளை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத் தேர்தலின்போது அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை ஹனுமன் கஞ்சைச் சேர்ந்த பாஜக தலைவர் மிஸ்ரா 2018-ல் மனுவைத் தாக்கல் செய்தார்.

வழக்குத் தொடர்ந்தவர் தரப்பு வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே கூறுகையில்,

இந்த வழக்குத் தொடர்பான வாதங்கள் மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் ஸ்ரீராம நவமி விடுமுறையின் காரணமாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

முந்தைய விசாரணை அமர்வின்போது, ​​ராகுல் காந்தி கூறியதாகக் கூறப்படும் கருத்துகள் அடங்கிய ஒலி மற்றும் காணொலி ஆதாரங்களை, அவரது உண்மையான குரலுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கக் கோரி, வழக்குத் தொடர்ந்தவர் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் மார்ச் 28 (நாளை) விசாரணை நடத்தப்படுவதாக எம்பி/எம்எல்ஏ நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

Summary

The hearing in a defamation case involving Rahul Gandhi was on Friday deferred in a local MP/MLA court here due to a holiday on Ram Navami, with the next date fixed for March 28.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.